tamilnadu

img

பெண்ணிடம் இருந்து ரு.45 லட்சத்தை பறித்து கொலை மிரட்டல் - பாஜக நிர்வாகி கைது

சென்னை கொரட்டூரில்,.பெண்ணிடம் இருந்து ரூ.45 லட்சம் பறித்துச் சென்றதுடன் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பாஜக மாநில நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மிண்ட் ரமேஷ் என்பவர் ரூ.45 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் பெண் ஒருவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதை அடுத்து, பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் பாஜக-வின் தமிழ்நாடு நெசவாளர் அணியின் மாநிலச் செயலாளர் மிண்ட் ரமேஷை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியான மிண்ட் ரமேஷ் மீது ஏற்கனவே வடசென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.