சென்னை, பிப். 6 - காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி செவ்வாயன்று (பிப். 6) சைதாப் பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அலுவல கம் முன்பு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.
அனைத்து நிலை காலிப் பணி யிடங்களையும் நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் நியமன நடைமுறை யை கைவிட வேண்டும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு வரை யறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட உரிமை களை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களை பணிவரன்முறைப் படுத்தி, மேம்படுத்தப்பட்ட ஊதி யத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்க கணக்கானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழங்கினர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வளர்ச்சி பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கென்னடி பூபாலராயன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.பாரி, பொருளாளர் கே.பாஸ்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணி போராட்டத் தை நிறைவு செய்து பேசினார்.