tamilnadu

img

“சொல்லின் செல்வர்” அய்யா சக்திதாசன் மறைவுக்கு தீ.ஒ.முன்னணி இரங்கல்

சென்னை:
“சொல்லின் செல்வர்” என்று அழைக்கப்படும்  அய்யா அ. சக்திதாசன்  அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ்  ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக “செட்யூல்ட் காஸ்ட் சம்மேளனம்” உருவாக்கி செயல்பட்ட ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவர் அய்யா அ.சக்திதாசன் அவர்கள். குடியாத்தத்தில் தோல் பதனிடும் தொழிலாளியின் மகனாய் பிறந்து தனது 95 வயது வரை அண்ணல் அம்பேத்கர் கொள்கை வழியில் நின்று மக்கள் தொண்டுசெய்தவர். எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். சென்னை சேத்துப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து,மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டவர்.அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து சமத்துவத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்த அய்யா அ.சக்திதாசன் அவர்களின்மறைவிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;