அக்ரி கார்ட் வலைதளம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தாளம்பாடி, ஏப்.27- பிஜிபி கல்லூரி மாணவிகள் விவசாயிகளை சந்தித்து அவர்களது விவசாயம் தொடர்பான கருத்துக்களை சேகரித்து வருகின்றனர். இந்த கருத்து கேட்பு நிகழ்ச்சியானது புதுச்சத்திரம் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது . இதில் பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், தெளிப்பான்கள், உரங்கள், காளான் போன்ற பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அதனால் தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கைக்கழகம் தொடங்கியுள்ள tnau agricart ஆன்லைன் வலைத்தளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்த இணைய தளத்தில் பல்வேறு ரக விதைகள், உரங்கள், பூஸ்டர், இயந்திரங்கள், காளான் விதைகள் போன்ற அனைத்தும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் என பிஜிபி மாணவிகள் எடுத்து கூறினர்.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரம், திப்பக்காப்பட்டி கிராமத்தில் கத்தரிக்காய் விவசாயி ஒருவர் பழங்கள் அழுகுவதை கண்டறிந்தார். அவர் கிராமப்புற அனுபவத்தில் உள்ள வேளாண் மாணவிகளிடம் இதற்கான தீர்வு குறித்து கேட்டார். இதனை கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் இயற்கை முறையில் சோற்று கற்றாழை கரைசலை தயாரித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம் என செயல் விளக்கமளித்தனர்.
புல்லாபுரத்தில் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு வெள்ளியன்று (ஏப்.25) எழும்பூர் பகுதி புல்லாபுரத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதித் தலைவர் ஹேமந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன், செயலாளர் கே.மணிகண்டன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பவானி, பகுதிச் செயலாளர் நாகராணி, மாவட்டக் குழு உறுப்பினர் சௌமியா, நாகலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
அம்பத்தூர், ஏப். 27- பூந்தமல்லியில் கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிட மிருந்து 10 கிலோ கஞ்சாவை போலீஸார் பறி முதல் செய்தனர். பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்த மல்லி மதுவிலக்கு அம லாக்கப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் போலீஸார் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் சூட்கேஸுடன் வந்த இளைஞரை போலீஸார் வழிமடக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவர் கொண்டு வந்த சூட்கேஸை சோதனை செய்த போது, அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த னர். இதன் பிறகு போலீ ஸார் இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், பண்டலம் பகுதியைச் சேர்ந்த ரிஜாஜ் (20) என்பதும், இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.