tamilnadu

‘திமுகதான் ஜெயிக்குமுங்க...’

“மீண்டும் மோடி வேண்டும் மோடி”  என பேச வந்த நடிகை கஸ்தூரி  திடீரென பல்டி அடித்து தமிழ கத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக  கூட்டணியே வெல்லும் என்றதால் கூட் டத்தை ஏற்பாடு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அப்செட் ஆகி எஸ்கேப் ஆன சம்பவம் நகைப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சித்தாபுதூரில் இந்து மக்கள்  கட்சியின் சார்பில் மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார துவக்க கூட்டம் நடை பெற்றது. இதில், இந்து மக்கள் கட்சி,  பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த நடிகை கஸ்தூரி,  பொதுகூட்டம் நிறைவடையும் கடைசி நேரத்திலேயே வந்தார். 

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பது போல, வந்தவர் செய்தி யாளர்கள் நீட்டிய மைக் முன்பு பேட்டி யளிக்கிறேன் பேர்வழி என வந்துவிட்டார். மொத்த மீடியா மைக்கும் கஸ்தூரி முன் னாள் நிற்பதை மேடையில் இருந்து கவ னித்த அர்ஜூன் சம்பத், அய்யோ நம்மள  விட்டுட்டாங்களே என அவசர அவசர மாக துண்டால் முகத்தை துடைத்து, இரு  கையால் தலைகோதி அவசர மேக்கப் போட்டு ஓடோடி வந்து கஸ்தூரியின் அரு கில் நின்றுவிட்டார்.

இதற்கு பிறகுதான் நிகழ்விடமே அமர்க்களமானது, என்ன பேட்டி வேணும்  உங்களுக்கு என கேள்வி கேட்ட கஸ்தூரி நிருபர்கள் பதில் அளிக்கும் முன்னே, தமி ழகத்தில் திமுக கூட்டணிதான் அனைத்து  தொகுதியிலும் வெல்லும் என ஒரு போடு  போட்டார். வேண்டும் மோடி மீண்டும் மோடி கூட்டத்தில் பேச வந்துவிட்டு திமுக தான் ஜெயிக்குமுன்னு சொல்ரீங்களே என நிருபர்கள் கேட்டதற்கு, திமுகவை எதிர்க்கும் அளவிற்கு எதிர்கட்சி யாரும் இல்லை. இது திமுகவை தோற்கடிக்கும் தேர்தல் அல்ல, திமுகவிற்கு அடுத்து  யார் இருக்கின்றார்கள் என்பதற்கான தேர்தல் என பாஜகவின் அஜண்டாவை  பக்காவாக தெரிவித்தார். அண்ணாமலை நாற்பது தொகுதியில் ஜெயிப்போம் என்கி றாரே என நிருபர்கள் கேட்டதற்கு, ஆசை  எல்லாருக்கும் இருக்குமுங்க…ஆனா நிதர்சனமுன்னு ஒன்னு இருக்குதுல்ல. திமுக கூட்டணி எந்த சிதறுலும் இல்லாம  பலமா இருக்கு. இங்க என்ன இருக்கு. ஒண்ணுமே இல்ல. அதனாலதான் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும் என  திரும்ப திரும்ப சொன்னார். கஸ்தூரியின்  இந்த பேட்டியை கண்ட அர்ஜூன் சம்பத்  வேர்க்க விறுவிறுக்க அங்கிருந்து நைசாக  எஸ்கேப் ஆனார்.

கஸ்தூரியை சுற்றி இருந்த சங்பரிவார் நிர்வாகிகளோ, தேர்தல் பிரச்சார துவக்க  கூட்டமே ஏழரையோடுதான் துவங்கி யிருக்கு என புலம்பியபடி நகர்ந்தனர்.