பூசாரிநாயக்கன் குளத்திற்கு தண்ணீர் விட தன்னிச்சை உத்தரவு விவசாயிகள் கடும் எதிர்ப்பால் அரசாணை நிறுத்தி வைப்பு
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் இருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட பிஏபி திட்ட விவசாயிக ளிடம் கலந்தாலோசிக்காமல் தன் னிச்சையாக அரசாணை பிறப்பிக் கப்பட்டது. இதற்கு பிஏபி விவசாயி கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசாணையை அமல்ப டுத்தாமல் நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித் துள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏ பி) திட்டத்தில் மூன்றாம் மண்ட லத்திற்கு ஐந்து சுற்று தண்ணீர் திறந்து விடுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஒரு சுற்று என்பது 21 நாட்கள் தண்ணீர் விட வேண்டும். எனினும் நடைமுறை யில் ஒரு சுற்று முடிய 29 நாட்கள் ஆகிறது. இன்னும் எஞ்சிய சுற்று கள் தண்ணீர் விட வேண்டியுள் ளது. இந்த நிலையில் பிஏபி மண்ட லத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது, வேறு பகுதிக்குத் தண்ணீர் திறக்கக்கூடாது என்ற சட்டத்திற்குப் புறம்பாக பூசாரி நாயக்கன் குளத் திற்கு தண்ணீர் திறக்க கடந்த வெள் ளியன்று அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த விபரம் தெரிய வந்த நிலையில் பிஏபி விவசாயி கள் அதிர்ச்சி அடைந்தனர். சட்டத் திற்குப் புறம்பாகத் தண்ணீர் திறக் கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது குறித்து கடந்த திங்க ளன்று பொள்ளாச்சியில் உள்ள பிஏபி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்திற்குச் சென்று அர சாணை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகள் எதிர்ப் புக்கு தெளிவான பதில் சொல்லாத அதிகாரிகள் அரசு நிர்வாகத்திடம் கேட்டு பதில் சொல்வதாகக் கூறி யுள்ளனர். இதனிடையே பிஏபி அனைத்து பாசன சபை விவசாயிகளிடமும் எதிர்ப்புப் பரவியது. இதுகுறித்து பிஏபி திட்டக்குழு தலைவர் மற் றும் உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் செவ்வாயன்று அழைப்பு விடுத் தார். எனினும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடி யாது, பிஏபி அனைத்து விவசாயி கள் சேர்ந்து வருவோம் என்று அவர் கள் தெரிவித்துவிட்டனர். இதன்படி புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிஏபி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்த னர். இங்கு மாவட்ட ஆட்சியர் பிஏபி திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்களை தனது அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். நீண்ட நேரம் பேசியும் எவ்வித முடிவும் காணாமல் காலதாமதம் மானது. எனினும் பிஏபி அனைத்து பாசன சபைத் தலைவர்கள், நி்ரவா கிகள், விவசாயிகள் கூட்ட அரங்கில் காத்திருந்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ், பூசாரிநாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் அரசா ணையை செயல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாக உறுதிய ளித்தார். மேலும் முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஏபி திட்டக் குழு மற்றும் பாசன சபைத் தலைவர் களை கலந்து பேசாமல் இனிமேல் மற்ற பகுதிகளுக்குத்தண்ணீர் திறக்கப்படாது என்றும் ஆட்சியர் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கள் பாலதண்டபாணி, வை.பழனி சாமி, உடுக்கம்பாளையம் எஸ்.பர மசிவம் மற்றும் பொங்கலூர் ஒன்றி யத்தில் இருந்து கிருஷ்ணமூர்த்தி, கருங்காளிபாளையம் பாலு ஆகி யோரும் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பு குறித்து கேட்டபோது, சட்டத்துக்கு விரோதமாக இது போல் தண்ணீர் திறக்க ஒரு முறை அனுமதித்தால், இதையே காரணமாகக் கொண்டு எதிர்காலத்தில் இத்திட்டத்தையே சீர்குலைத்து விடுவார்கள். மேலும் இடையில் வேறு பகுதிக்கு தண் ணீர் விட்டால் தற்போது எந்த பயி ரும் சாகுபடி செய்ய முடியாது. என வேதான் பிஏபி விவசாயிகள் ஒட்டு மொத்தமாக கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர் என்று கூறினர்.