திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோலூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் அரசு மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 37 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ம.ப. சிவன்அருள் ஆகியோர் பார்வையிட்டு, நரிக்குறவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பிறகு, நரிக்குறவர் மாண வர்கள் பயிலும் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி கல்வித் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.