அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 3 நாள் செயற்குழு கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (டிச. 7) துவங்கியது. சங்கக் கொடியை அகில இந்தியத் தலைவர் என்.ரமேஷ் ஏற்றினார். பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா துவக்கி வைத்து பேசினார். இதில் மூத்த தலைவர்கள் அமானுல்லாகான், கே.வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.