பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் அருகே மாவட்டத் தலைவர் வெண்ணிலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் சுரேஷ், சிஐடியு முன்னாள் துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பிஜி.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.