tamilnadu

ஏர்டெல் நிறுவன தலைவரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.30 கோடியாக உயர்வு

சென்னை, ஆக. 5 -  சமீபத்தில், ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக உயர்த்தின.  ஏர்டெல் நிறுவனம் தனது கட்டணத்தை 21சத விகிதம் வரை உயர்த்தியுள்ளது.  இந்த  கட்டண உயர்வால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் லாபம் ரூ.20,000 கோடி அதிகரிக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் இந்த உயர்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.  இந்த சூழ்நிலையில், ஏர்டெல்  நிறுவனம், அதன் தலைவர் சுனில் மிட்டல் பாரதியின் சம்பளத்தை ஆண்டுக்கு ரூ.30  கோடியாக உயர்த்தியுள்ளது.  தற்போது அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.15 கோடி.  இந்த சம்பள உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல்  அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாமானியர்களை கொள்ளையடித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி வளர்கின்றன என்பதற்கும், அரசு எப்படி மௌனப் பார்வையாளனாக இருக்கிறது என்பதற்கும், தொலைத்தொடர்பு கட்டண உயர்வு ஒரு சிறந்த உதாரணம் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் விமர்சித்துள்ளன.