அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்த கூட்டத்தில் பங்கேற்கலாம்!
சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இறுதி நாளில் (ஜூன் 29) அவை முன்ன வர் துரைமுருகன் பேசும்போது, ‘‘அதி முக உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் பேரவையில் இருந்து நீக்கி வைப்பதாக முன்மொழியப்பட்ட தீர்மானம் பேரவையில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. முதல்வரின் பரிசீலனை ஏற்று, கூட்டத் தொடர் என் பதை ‘கூட்டம்’ என மாற்றிக் கொள்ள லாம் என்ற தீர்மானத்தை முன்மொழி கிறேன்’’ என்றார்.
இதையடுத்து தீர்மானம் வாக்கெ டுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் அதிமுக உறுப்பி னர்கள் பங்கேற்கலாம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
விழுப்புரம், ஜூன் 30- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சா ரம் செய்வதற்கு விழுப்புரம் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், செய்தியா ளர்களிடம் பேசினார்.
அப்போது, “ஒன்றிய ஆட்சியில் உள்ளவர்கள் ஆட்டுவிக்கும் சக்தியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. பிரத மரின் மறைமுக வேட்பாளராக ஓ. பன்னீர் செல்வம் இராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணையாததால்தான் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வருங்காலங்களில் இதை உணர்ந்து இந்தியா கூட்டணி செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் 4,698 சாதிகள் உள்ள தாக கணக்கெடுப்பு சொல்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்றிய அரசு நடத்தும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கடன் வழங்க கோரிக்கை
தருமபுரி, ஜூன் 30- மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கடன் வழங்க வேண் டும் என, காதுகேளாதோர், வாய்பேசா தோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு காதுகேளாதோர் வாய் பேசாதோர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம், தருமபுரி செங்கொடிபுரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சொர்ண வேல், மாநிலப் பொருளாளர் பவானி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத் தின் மாநிலத் தலைவர் டி.வில்சன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவரத்தி, மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைப் போன்று மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையை தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களி லும் காது கேளாதோர், வாய் பேசாதோர் புரிந்து கொள்ளும் வகையில் முக்கிய அரசு அலுவலகங்களில் சைகை மொழி தெரிந்த மொழிப் பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோர், வாய்பேசாதோருக்கு எவ்வித நிபந்த னையின்றி கடன் வழங்க வேண்டும். தனியார் துறையில் பணிபுரியும் மாற்றத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆக.6 ஓய்வூதியர் தர்ணா
மதுரை, ஜூன் 29- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத் தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மதுரையில் மாநிலத் தலைவர் நெ. இல. சீதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் என். ஜெயச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் அனுப்பிய கோரிக்கை விண்ணப்பங்களின் மீது முடிவுகள் எடுப்பதில் காப்பீட்டு நிறுவனம் கடுமையான கால தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓய்வூதியரால் சிகிச்சை செய்ததற்கு கோரப்படும் தொகைக்கும் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் நிதிக்கும் எந்த பொருத்தமும் இல்லாமல் மிக குறை வான நிதியே வழங்கப்படுகிறது. முழுமையான பணமில்லா சிகிச்சை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. கோரிக்கை மனுக் கள் எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கண்ட றிய வலைதளம் (Tracking system) உருவாக்கப்பட வில்லை. புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் அனைத்து குறை பாடுகளையும் தீர்வு செய்திடக்கோரி ஆகஸ்ட் 6 அன்று மாநி லம் தழுவி அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மிகைச்செலவுக்கு சட்டப்பேரவை ஒப்புதல்
சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு அரசின் 2016-17 ஆம் ஆண் டில் ரூ. 167.16 கோடி, 2017 18 ஆம் ஆண் டில் ரூ.77.5 கோடி, 2018-19 ஆம் ஆண்டு களில் ரூ.1480.5 கோடி என மொத்தம் 1, 725. 26 கோடி ரூபாய் மிகை செலவு களுக்கான மானிய கோரிக்கைகள் தமிழ் நாடு சட்டப்பேரவையில் மாநில அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசினார்.
அப்போது, பொது நிதி ஒதுக்க கணக் குகளை பொது கணக்குக்குழு ஆய்வு செய்ததில் சில மானியங்களின் கீழ் அனு மதிக்கப்பட்ட நிதிக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த மிகை செலவிற்கான கார ணங்களை ஆராய்ந்து பிறகு, ஒவ்வொரு மானியத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கத்திற்கு மிகையாக செய் யப்பட்ட செலவுகளுக்கு ஒப்புதல் பெறு வதற்கான சட்டமன்ற பேரவையில் மானிய கோரிக்கைகள் கீழ் வைக்கப்பட லாம் என்று பொதுக் கணக்கு குழு பரிந்து ரைத்துள்ளது என்றார்.
அதன்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிகைச் செலவு மானிய கோரிக்கை களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறினார். விவாதமின்றி ஒப்புதல் அளிக் கப்பட்டது.
34 சட்டத்திருத்த மசோதாக்கள், 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை, ஜூன் 30- தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதியில் பேரவைத் தலை வர் மு.அப்பாவு உரையாற்றினார். அப்போது, இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 34 சட்டத் திருத்த மசோதாக் கள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
அரசு சார்பில் அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப் படுத்தக் கூடாது. மக்கள் தொகை கணக் கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை யும் சேர்த்து நடத்த வேண்டும், ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனடி ஒப்புதல் தர வேண்டும் உள்பட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சட்டசபை 110 விதியின் கீழ் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் ஊரக சாலைகள் சீரமைப்பு, 75 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்களை வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிரப்புவது உள்ளிட்ட 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.