வணிகவரித்துறையில் 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே & ஜுன்) கடந்த நிதியாண்டைவிட ரூ.3727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரித்துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் ரூ.1040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகள் ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமையன்று வணிகவரி -பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.