tamilnadu

img

நடிகை சித்ரா மரணம் தற்கொலையே.....

சென்னை:
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என்று உடற்கூறு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்துக்கு அவளது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாயார் கூறியுள்ளார்.சித்ராவின் உடல் கூராய்வை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை மணி நேரம் இரண்டு மருத்துவர்கள் செய்து முடித்தனர். பின்னர் அவரது உடல்,பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.சின்னத்திரை நடிகர் சித்ராவின் மரணம் அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவரின் உடற்கூராய்வு நடந்த மருத்துவமனையில் திரைத்துறை, சின்னத்திரை இயக்குனர்கள் சக நடிகர்கள் என பலரும் திரண்டனர். மேலும் அவரின் ரசிகர்கள் பெருமளவு கூடியிருந்தனர்.

முன்னதாக அவரது தாயார் கண்ணீர் மல்க ஊடகங்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “எனது மகள் மிகவும் தைரியமான பெண். காரை சொந்தமாகவே ஓட்டிவருவார். எந்தப் பிரச்சனையையும் தைரியமாக அணுகும் பக்குவம் கொண்டவர். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அவளை அவளது கணவன் ஹேம்நாத் அடித்தே கொன்றுவிட்டான்.என் மகளின் சாவுக்கு நீதி வேண்டும், இது தொடர் பாக நான் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன்” என்றார்.இதற்கிடையே, ஹேம் நாத்திடம் காவலர்கள் இரண் டாவது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாகவும் கூறப்படுகிறது.உடற்கூறு ஆய்வு முடிந்து முதற்கட்ட அறிக்கை வெளியானது. அதில், சித்ராவின் மரணம் தற்கொலையே என்று கூறப்பட்டுள்ளது. முகத்தில் உள்ள காயம் கீறல்கள் தூக்குபோட்டுதற்கான அடையாளமே என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;