tamilnadu

அதிகளவில் காலிப்பணியிடங்கள்; பணிச்சுமை: மற்ற துறைகளை கருவூலத்துறையுடன் இணைக்கும் முடிவை கைவிடுக!

சென்னை, ஜூலை 22- அதிகளவில் காலிப்பணியிடங்களும் மிகுந்த பணிச்சுமையும் உள்ள நிலையில் மற்ற துறைகளை கருவூலத்துறையுடன் இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு கருவூலம்- கணக்குத்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநி லத்தலைவர் ஜெ.மூர்த்தி, பொதுச்செய லாளர் வெ.லெனின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தற்போது உள்ள சூழ்நிலையில் மிகுதியான காலிப்பணியிடங்களுடன் கருவூலத்துறை ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் கடுமையான பணிச்சுமையில் பணி செய்து கொண்டிருக்கின்றனர்.

40 சதவீதத்திற்கு மேல் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கர் பணியிடமும் அலுவலக உதவியாளர் பணியிடமும்  தொடர்ச்சியாக மூன்றாண்டு களுக்கு மேல்  காலியாகவே உள்ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். 

இந்தச் சூழ்நிலையில் கருவூலத்துறை யுடன் மற்ற நிதித்துறைகளை  இணைப்பதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

இவ்வாறு துறைகளை இணைப்பது கூடுதல் பணிச்சுமையை மட்டுமே ஏற்படுத்தும் என்பதையும்  இந்த இணைப்பு எவ்வித பலனையும் தராது  என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறோம். மேலும் பணி மூப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படும் நிலையும் ஏற்படும். ஆகையினால் இது முற்றிலுமாக தவிர்க்க   வேண்டும். 

மேலும் தற்போதைய   ஆணையர் பொறுப்பு ஏற்றது முதல், பணி மாறு தல்கள், பதவி உயர்வு பணி அமர்வு மற்றும் பதவி உயர்வில் மருத்துவ ரீதியாக வும், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் தற்காலிகமாக பதவி உயர்வு துறப்பு  கடிதம் ஊழியர்களால் வழங்கும்போது, அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத போக்கும் துறையில் நடைமுறைப் படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலும் பல்வேறு குளறுபடிகளுமே  மிஞ்சி யுள்ளது.

அரசால் ஒப்பளிக்கப்பட்ட பல நிலை பணியிடங்களில் மிகுதி யான காலிப்பணியிடங்கள் உள்ள சூழ்நிலையில் துறைகளை இணைப்ப தற்கு அரசுக்கு பரிந்துரை செய்வது என்பது ஏற்புடையது இல்லை. மனித வளத்தை பெருக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய, சமூக நீதியை பேணிக் காக்க வேண்டிய  அரசாங்கத்திற்கு தவறான பரிந்துரை களை தொடர்ச்சியாக வழங்கி வருவதால் மக்கள் மத்தியிலும் ஊழியர்கள் மத்தியிலும் அரசின் மீது அதிருப்தி ஏற்படுத்துகின்ற சூழல் உள்ளது.

எனவே நிதித்துறையில் உள்ள மற்ற துறைகளை கருவூலத்துறையுடன் இணைக்கும் முடிவை  உடனடியாக கைவிட வேண்டும்.  

அவ்வாறு கைவிடாத பட்சத்தில் கருவூலத்துறையையும் அதன் ஊழியர்களையும் பாதுகாக்கும் விதமாக போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதை ஆணையருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.