tamilnadu

img

சிறுவனை கடித்த ராட்வீலர் நாய்

அம்பத்தூர், ஜூன் 21- மாங்காடு பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுவனை ராட்வீலர் நாய் கடித்தது.

பூந்தமல்லி அருகே உள்ள மாங்காடு கொழுமணிவாக்கம் சார்லஸ் நகரில் நாயின் உரிமை யாளர், நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, உரிமை யாளரின் பிடியிலிருந்து நழுவி வீட்டின் முன்பு நின்றிருந்த சிறுவன் துஜேஷ் (11) என்ற சிறுவனை ராட்வீ லர் ராய் கடித்துக் குதறியுள்ளது.

நாய் கடித்து காயமடைந்த சிறு வன் துஜேஷ் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சிறுவனின் பெற்றோர் நாய் உரிமை யாளர்கள் நீலா மற்றும் கார்த்திக் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.