“போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதே போன்று விசிகவிலும் ஒருவர் நீக்கப்பட்டார். ஆனால் ஆதீனத்தை மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவர்கள் பாஜகவில் உள்ளனர், அவர்கள் மீது பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேலும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு ஒன்றிய அரசுக்கு உள்ளது?” என்று மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.