tamilnadu

4 மாவட்டங்களில் 92 விழுக்காடு நிவாரண நிதி வழங்கப்பட்டது

சென்னை,டிச.22- புயல், மழை வெள்ளத்தால் பாதி க்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் தற்போது வரை 92 விழுக்காடு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயலால் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை யில் உள்ள அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்க ளில் உள்ள சில பகுதிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், இதற்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு தற்போது வரை 92 விழுக்காடு நபர்களுக்கு நிவாரண நிதியானது வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

5.5 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்த நிலையில் நிவாரண தொகை பெற குடும்ப அட்டை இல்லா மல் சுமார் 5.5 லட்சம் பேர் விண்ண ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இதில் சென்னையில் 4.90 லட்சம், காஞ்சிபுரம் மாவட்டத் தில் 29 ஆயிரம், திருவள்ளூர் மாவட் டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பங்கள் பரி சீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.