tamilnadu

ஆருத்ரா மோசடி வழக்கு

சென்னை, மார்ச் 17- ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு  தொடர்பாக, 400 முகவர்களின் 86 சொத்துக் களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை யினர் முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஆருத்ரா  நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமையிடம் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 40 விழுக்காடு வரை கூடுதல் வட்டி தருவதாக கூறியிருந்தனர்.

இதை நம்பி லட்சக்கணக்கானோர் அந்த நிறு வனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறு வனமோ முதலீட்டாளர்களுக்கு சொன்னது போல்  பணத்தை திரும்பச் செலுத்தவில்லை. இதை யடுத்து முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கூறினர். இந்த வழக்கு தொடர்பாக ஐ.ஜி. ஆசியம்மாள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த னர். சுமார் 1,09,255 பேர் ரூ.2438 கோடி வரை முதலீடு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறு வனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சி புரத்தை சேர்ந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரீஷ், தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகி களுக்கு பணம் கொடுத்தது வெளியானது. பணம் கொடுத்ததால்தான் ஹரீஷ்க்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். அந்த பொறுப்பை பெறுவதற்கு பாஜகவை சேர்ந்த சிலருக்கு மோசடி பணத்திலிருந்து ஹரீஷ் பங்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ரூ. 15 கோடி பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் வெளிநாடு தப்பிச் சென்ற அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், 7000  முகவர்களை கண்டறிந்து, மோசடி செய்யும் நோக்கில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த 500 முகவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.500 முகவர்களில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த  86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது.

இந்த முகவர்களில் 100க்கும் மேற்பட்டோ ரின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு ள்ளது.ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.