மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
சென்னை, மே 20 - சென்னை மாநகராட்சியில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நுண்அளவில் கண்காணித்து தடுக்க ‘நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்ட’த்தை புதனன்று (மே 20) ராயபுரம் மண்டலத்தில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றை தடுக்க கட்டுப்ப டுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் துவங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர். முதற்கட்ட மாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை துவங்கியுள்ளனர் என்றார். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 167 வார்டுகளில் 10க்கும் குறைவான நபர்க ளுக்கே வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள் ளது. 33 வார்டுகளில் மட்டுமே பாதிப்பு அதிக மாக உள்ளது. எனவே, இந்தப் பகுதி களில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.