சென்னை, ஜூன் 5- பள்ளிக்கல்வித் துறை அறி விப்பின்படி ஜூன் 10 அன்று தமி ழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளி கள் திறப்பு, வார இறுதி நாட் களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்கு நர் ஆர்.மோகன் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு ஏற்ப ஜூன் 9 அன்று 705 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு பகுதி களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமி டப்பட்டுள்ளது.
ஜூன் 8, 9 வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந் தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமா னோர் பயணம் மேற்கொள்வார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள் தோறும் இயக்கப்படும் பேருந்து களுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமி டப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திரு வண்ணாமலை, திருச்சி, கும்ப கோணம், மதுரை, திருநெல் வேலி, நாகர்கோவில், கன்னியா குமரி, தூத்துக்குடி, கோயம் புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1,105 பேருந்து களும், சென்னை, கோயம் பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்க ளூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்புப் பேருந்துகளும் இயக் கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப் பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகளுமாக மொத்தம் 1,465 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட் களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 7, 8 தேதிகளில் தலா 15 பேருந்து கள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்கா ணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். தமிழகம் முழுவதும் ஜூன் 7, 8, 9 தேதிகளில் பயணிக்க இது வரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.