சென்னை, ஜன.7- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் மற்றும் கலைஞர்கள் சங்கத் தின் சார்பாக சென்னை புத்தகக் கண்காட்சியில் 51 நூல்கள் வெளி யீட்டு விழா மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மூத்த தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் கருப்பு அன்பரசன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். ஸ்டாலின் சர வணன், மதுரை நம்பி, இளங்கோ கிருஷ்ணன், சுகிர்தராணி போன்ற படைப்பாளர்களின் உட்பட 51 படைப்பாளர்களின் நூல்களும் வெளி யிடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். நூலாசிரியர்கள் ரயில்வே துறை யில் பணிபுரியும் ஹரிகிருஷ்ணன் மற்றும் இஸ்ரோவில் பணிபுரியும் அறி வியல் அறிஞர் முனைவர் சசிகுமார் ஆகியோர் எழுதிய “ரயிலே ரயிலே” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு நிகழ்வு புக்ஸ் ஃபார் சில்ட்ரன் அரங்கில் பாரதி புத்தகா லயம் பதிப்பாளர் நாகராஜன் தலை மையில் நடைபெற்றது. நூலினை ரயில்வே தொழிற்சங்க தலைவர் பார்த்தசாரதி வெளியிட ரயில்வே துறையில் பணிபுரியும் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். அறிவியல் பலகை இதழின் பொறுப்பாசிரியர் எழுத்தாளர் ஸ்ரீகுமார், வசந்தா பதிப்பகம் இயக்கு னர் பாட்டழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் நரசிம்மன், பாரதி புத்தகாலயம் ரவி, ரமேஷ், பால்ராஜ், மருத்துவர் சங்கீதா, சித்ரா பிரபாகர், ஆத்மிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலாசிரியர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர் சசிகுமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.