50 ஆண்டு சட்டப்பேரவை நிகழ்வுகள் டிஜிட்டல்மயம்
விரைவில் பார்வையிடலாம்
சென்னை, ஜூலை 12- தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளின் கோப்புகள், செயல்பாடு கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாறிவருகின்றன.
அந்த வகையில், தற்போது பேரவை நூலகத்தில் புத்தக வடிவாக உள்ள- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகள்- முக்கியமான விவாதங்கள், தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
இதில், குறிப்பிட்ட ஒரு வார்த்தையை அதாவது கருணாநிதி, ஜெயலலிதா என பெயர் பதிவிட்டால், அவர்கள் பேசிய அனைத்தும் வரும். காவிரி, கச்சத்தீவு என முக்கிய நிகழ்வுகளை பதிவிட்டால் அது தொடர்பான விவாதங்கள், நிகழ்வுகள் அனைத்தும் வரும். இப்பணிகள் முடிந்ததும் டிஜிட்டல் மயத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் 3 பேர் கைது!
சென்னை, ஜூலை 12 - பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதலில் 8 பேரும், பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்ட னர். தற்போது அந்த 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அருள் என்பவரின் செல்போன் தொடர்புகளின் அடிப்படையிலும், பெரம்பூர் பகுதியி லுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி யும் விசாரணை நடத்தி வந்த நிலை யில், இந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இந்நிலையில், பூந்தமல்லி சிறையில் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சசிகலா, ஓபிஎஸ்க்கு இடமில்லை: எடப்பாடி
சென்னை, ஜூலை 12- நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக சென்னை ராயப்பேட் டையில் உள்ள அதி முக தலைமை அலுவல கத்தில் 3-வது நாளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி னார். அரக்கோணம், தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட் டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என சில நிர்வாகிகள் கூறினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட மாக மறுப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் ஓபிஎஸ், சசிகலாவின் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அயோத்திக்கு
அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி?
மதுரை, ஜூலை 12- அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, 100 பேர் ஏமாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சேலத்தை சேர்ந்த டிராவல்ஸ் நிறு வனம் ஒன்று, ‘அயோத்தி ராமர் கோவி லுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, நபர் ஒருவருக்குக் கட்டணம் ரூ. 29 ஆயிரத்தை வசூலித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணச்சீட்டையும் பயணிகளிடம் கொடுத்துள்ளது. இதையடுத்து சுமார் 106 பேர் பயணச் சீட்டுடன் வெள்ளியன்று மதுரை விமான நிலையம் வந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனமோ அயோத்திக்குச் செல்ல முன்பதிவு ஏதும் செய்யப்படவில்லையே..
எனக் கூறி, பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்ட தாக பயணிகள் புலம்ப ஆரம்பித்தனர். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 12) விமானத்தில் அயோத்தி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ‘இடையில் ஏதோ நடந்துவிட்டது’ என்று கூறி பயண ஏற்பாட்டாளர் ராஜா சமாளித்துள்ளார். அனைவரும் ஜூலை 18-ஆம் தேதி அயோத்தி அழைத்துச் செல்லப்படுவர் என்றும் கூறி, அனைத்துப் பயணிகளை யும் மீண்டும் சேலத்திற்கே அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே, டிராவல்ஸ் நிறுவனம் விமானப் பயணிகளுக்கு கொடுத்தது போலி பயணச் சீட்டா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சீமான் இழிவான பேச்சு: நடவடிக்கை கோரி புகார்
சென்னை, ஜூலை 12- எழும்பூரைச் சேர்ந்தவர் நடராஜன். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞ ராக இருக்கும் இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சி தலைவர் சீமான் தனி யார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக இருந்து மறைந்த கலை ஞர் கருணாநிதியை தமிழக மக்களே கொந்தளிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.
‘சண்டாளன்’ என்ற வார்த்தை ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த ஒரு சாதியை சேர்ந்த மக்களை குறிப்பிடு வதாகும். மற்றவர்களை இழிவுப் படுத்தும் அந்த வார்த்தையை ஏற்கெ னவே கூறி மன்னிப்புக் கேட்டிருந்த நிலை யில், மீண்டும் அதே வார்த்தையை குறிப் பிட்டு இழிவுபடுத்தி பேசி உள்ளார். எனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் அவதூறு பேச்சுக்கு எதிராக சட்டப்படியான குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, ஜூலை 12- தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 13) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 2-ஆவது சனிக் கிழமை விடுமுறையாக அறி விக்க வேண்டும் என்று பல் வேறு ஆசிரியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு இந்த விடு முறையை அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு
ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்
புதுதில்லி, ஜூலை 12 - ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடிக் கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 3,500 கிலோ சூடோபீட்ரின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் திரைப்பட தயா ரிப்பாளர் ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மாா்ச் 9 அன்று கைது செய்த னர்.
தில்லி திகார் சிறையில் அடைக் கப்பட்டுள்ள அவருக்கு பல் வேறு நிபந்தனைகளுடன் தில்லி போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் ரூ. 1 லட்சம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும், அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாபர் சாதிக் சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி
வழக்கு விசாரணையை 15 மாதத்தில் முடிக்க உத்தரவு
மதுரை, ஜூலை 12- மதுரையைத் தலைமையிட மாகக் கொண்டு ‘நியோ மேக்ஸ்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் இருந்த நிலையில், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல் வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும், சில ருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி தண்டபாணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக அறிந்து புகார் கொடுக்கும் விதமாக பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும் என பொருளா தார குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், ‘நியோ மேக்ஸ்’ நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை 15 மாதத் தில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.