tamilnadu

img

தமிழ்நாட்டில் 5.25 லட்சத்தினைக் கடந்த கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 84, ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று 5 ஆயிரத்து 524 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை மாநிலம் முழுவதும் 62 லட்சத்து 23 ஆயிரத்து 627 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றால் 59 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 618 ஆகா அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 174 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.