tamilnadu

img

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் அவகாசம்!

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் வழிவகைசெய்கிறது. 
குழந்தையின் பிறப்பை, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு,இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை, 15 ஆண்டுகளுக்குள் உரிய காலதாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.

இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள்படி, கடந்த 2000ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதிக்கு முன் பிறந்த குழந்தைகள் பெயர் பதிவு செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது மேலும் 5 ஆண்டுகால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்புப திவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம்.பெயர் பதிவு செய்ய கிராம ஊராட்சியாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலர்அல்லது துப்புரவு ஆய்வாளரிடமும், கண்டோன்மென்ட், நகராட்சி,மாநகராட்சிகளில் துப்புரவு ஆய்வாளர், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதார ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்கலாம்.

தற்போது வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;