சென்னை, மே 8- தோழர் வி.பி.சிந்தன் காட்டிய பாதையில் தொழிலாளர்களை அணி திரட்டுவோம் என்று அவரது நினைவு நாள் கூட்டத்தில் அ.சவுந்தர ராசன் கூறினார்.
தொழிற்சங்க இயக்க மூத்த தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 37ஆவது நினைவு தினத்தையொட்டி சிஐடியு மாநிலக்குழு, சென்னை மாவட்டக் குழுக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்கள் வி.பி.சிந்தன், எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.ராமமூர்த்தி ஆகியோரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதனன்று (மே 8) நடைபெற்றது.
சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் ஓட்டேரி ஏ.பி. நினைவகத்தில் இருந்து பேரணியாகச் சென்று அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தப்பட்டது.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பேசுகையில், தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழுவின் முதல் செயலாளராக இருந்து வலு வான கட்சியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர். அவர் நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினராக செயல்பட்டார். பல்வேறு குழுக்களில் கட்சியின் சார்பில் பங்கேற்றவர். விளம்பரத்தை விரும்பாதவர். மிகப்பெரிய பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இறுதி வரை போரா டியவர். 1988ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது உடலை இங்குதான் அடக்கம் செய்தோம்.
தோழர் பி.ராமமூர்த்தி இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர் பி.டி.ரணதிவே, ராம மூர்த்தி ஒரு அபூர்வ மனிதர் என்று கூறி னார். மிகச்சிறந்த சிந்தனையாளர், அறிவாளி. பல மொழிகளை அறிந்தவர். சிஐடியு உரு வான போது முதல் பொதுச் செயலாள ராக பொறுப்பேற்றார். அரசுக்கு ஆதரவாக செயல்படுவது என்று சில தொழிற்சங்கங்கள் கூறிய போது அதை உறுதியுடன் எதிர்த்த வர். சிஐடியு தொடங்கிய 4ஆவது ஆண்டில் ரயில்வே போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சூழ் நிலையில் தொழிலாளர்களை, தொழிற்சங்கங் களை ஒன்றுபடுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றியவர் தோழர் பி.ராமமூர்த்தி. அவர் மறைந்த பிறகு அவரது உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது.
தொழிற்சங்க இயக்கத்திற்கு தோழர் வி.பி.சிந்தன் வந்த பிறகு சென்னையில் அடிப்படை யில் மாற்றம் ஏற்பட்டது. முதலாளிகளின் ஆதரவோடு சில சங்கங்கள் செயல்பட்டன. அதை எதிர்த்தும், முதலாளிகளுக்கு எதிராக வும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் கீழ் செயல்படும் தொழிற்சங்க தலைவர்கள் சென்னை நகரத்தில் வலுவான தொழிற்சங்க இயக்கத்தையும், போராட்டத்தையும் கட்டியமைத்தார்கள். துரோகங்களை அம்ப லப்படுத்தினார்கள். அப்போது பல்வேறு அடக்குமுறைகளை தலைவர்களும், தொழி லாளர்களும் எதிர்கொண்டனர். பலர் தாக்கப் பட்டனர், கொலை செய்யப்பட்டனர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பிற அரசியல் கட்சியை சார்ந்த தலைவர் களைக் கூட ஈர்த்த மாபெரும் தலைவர் வி.பி.சிந்தன். காவல்துறை, ரவுடிகள் தாக்குதல் என அவர் சந்தித்த அடக்குமுறைகள் ஏரா ளம். அதுமட்டுமல்லாமல், காரணமே இல்லா மல் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார்.
ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் புரட்சிகர உணர்வை எதிரொலித்துக் கொண்டே இருப்பார். உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தார். சோவியத் யூனி யன் நடத்திய செஞ்சேனை புரட்சி குறித்து உணர்வுப்பூர்வமாக, உணர்ச்சிகரமாக பேசு வார். இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிஸ்டுகளை வீழ்த்திய நாள் மே 9. அந்த பாசிஸ்டுகளை வீழ்த்திய மண்ணில்தான் அவர் மறைந்தார். அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.
தோழர் வி.பி.சிந்தன் காட்டிய வழிகாட்டு தலின் அடிப்படையில், தொழிலாளர் நலன் என்ற வர்க்கப் புள்ளியில் நின்று தொழிலாளர் களை திரட்டுவோம்; தொழிற்சங்க இயக்கங் களை ஒன்றிணைப்போம். தற்போது நாட்டில் தலைதூக்கி வரும் பாசிசத்தை முறியடிக்க இந்நாளில் சபதமேற்போம். இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந் திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் வி.தயானந்தம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, தென்சென்னை மாவட்டச் செயலா ளர் பா.பாலகிருஷ்ணன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் எம்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகுமார், சாலை போக்கு வரத்து சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்பு சாமி, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் தலைவர் துரை, பொருளாளர் பாலாஜி, ஜெயகோபால் (ஆட்டோ சங்கம்) உள்ளி ட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக நினைவிடத்தை மீண்டும் புதிதாக வடிவமைத்த ஊழியர்கள் ராஜேந்திரகுமார், ராமகிருஷ்ணன், புகழேந்தி, விஷ்ணு ஆகி யோருக்கு அ.சவுந்தரராசன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.