tamilnadu

img

மருத்துவப் படிப்புக்கு 32,000 பேர் விண்ணப்பம்....

சென்னை:
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரையில் 32 ஆயிரம்மாணவர்களுக்கு மேலாக விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படை யில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு வழக்கமாக உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி தரவரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.இந்த வருடம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 300 பேருக்கு மருத்துவப் படிப்பு படிக்க இந்த இடஒதுக்கீடு வழிவகை செய்துள்ளது.அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். இடையில் சேர்ந்து படித்தாலோ, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தாலோ கிடைக்காது.

அந்த வகையில் இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் 747 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இது தவிர கடந்த வருடம் படித்த மாணவர்கள் 113 பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளனர்.மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் சான்று பெற்று அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.அதன்படி இதுவரையில் 851 பேர் தாங்கள் படித்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மற் றும் முதன்மை கல்வி அதிகாரியின் கையொப்பமிட்ட சான்றிதழை பெற்று உள்ளனர்.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி இருப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வின் மூலம் பறிபோனது. ஆனால் தற்போது கொண்டு வரப் பட்டுள்ள இடஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர் களின் குழந்தைகள் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.மேலும் இது அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. இதன்மூலம் 300-க்கும் மேற் பட்ட ஏழை பிள்ளைகள் மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள்.இதுவரையில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று சென்றுள்ளனர். பெறாதவர்களும் ஓரிரு நாட்களில் பெற்று விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.