சென்னை, செப். 10 - ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோ மேஷன் நிறுவனங்களுடன் ரூ. 2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:-
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் செப்.9 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்து டன் ரூ. 666 கோடி முதலீட்டில் காஞ்சி புரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கு மற்றும் ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளை ஞர்களின் திறன்களை மேம்படுத்துவ தற்காகவும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின் போது, தொழில், முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழி காட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர் கள் உடனிருந்தனர்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.