tamilnadu

img

சுபிக்ஷா நிறுவன மோசடி வழக்கில் தீர்ப்பு

சென்னை,நவ.28- சென்னை அடையாறு காந்தி  நகரில் ‘விஸ்வ பிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்கிற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார் சுப்பிரமணியம். அவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்

தங்கள் நிதி நிறுவனத்தில் 11 விழுக்காட்டுக்கு மேல் வட்டி  தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. இதையடுத்து ஏராள மானோர் சுபிக்ஷா சுப்பிர மணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர். ஆனால், விஸ்வப்பிரியா நிதி நிறுவனம் தாங்கள் கூறியது போல பொது மக்கள் முதலீடு பணத்திற்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

இது தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்  விஸ்வப்பிரியா நிதி நிறுவனம்  நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணி யன் 17 துணை நிறுவனங்களை யும் நடத்தி 500-க்கும் மேற்பட்ட வர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது.  இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடு களை செய்திருப்பதும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாரா யணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடி வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசா ரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம்  51 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியன் அவரது  கூட்டாளிகள் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறை கேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக்களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதி யில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டு களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

இதையடுத்து சிறப்பு நீதிமன்ற  நீதிபதி கருணாநிதி 543 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில்  வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா  சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப் பளிக்கப்பட்டது.

நிதி நிறுவன இயக்குநர்க ளில் ஒருவரான ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்கு நர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மொத்தம் ரூ.191.98 கோடி அபராதம் விதிக்கப் படுவதாகவும் அதில் ரூ.180 கோடி டெபாசிட் செய்த அனை வருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித் துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள்  சொத்துக்களை பறிமுதல் செய்ய என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.