சென்னையில் தேர்தலை கண்காணிக்க 192 குழுக்கள்
சென்னை, மார்ச் 10- சென்னை மாவட் டத்தில் நாடாளு மன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண் காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, பார்க்கும் குழு, கணக்கியல் குழு ஆகியவற்றிற்கு தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் 496 பேர் பணி அமர்த்தப் பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், ரிப்பன் மாளிகையில் நடை பெற்றது. அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநகராட்சி கூடுதல் கமிஷனரும், மாவட்ட தேர்தல் கூடுதல் அலுவலருமான லலிதா விளக்கினர்.
தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வரப்பட்டால், உடனடி யாக தகவல் தெரிவிக்க செய்ய, இஎஸ் எம்எஸ் என்ற இணைய பதிவு தொடங் கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வாகனங்களிலும் புதிதாக, ‘கண்காணிப்பு கேமரா’ பொருத்தப்பட உள்ளது.
இதன்மூலம், வீடியோ பதிவு செய்ப வருடன், வாகனங்களில் உள்ள கேமரா வில் பதிவாவதை, கண்காணிப்பு அறை யில் இருந்து கண்காணிக்க முடியும். பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், சோதனை பணியில் ஈடுபட அறிவுறுத் தப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கொல்கத்தா, மார்ச் 10- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத் தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியி டுகிறது. இந்நிலை யில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். 42 பேர் கொண்ட பட்டியலில், மஹூவா மொய்த்ரா, பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகின்றனர். காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து யூசுப்
பதான் போட்டியிடுகிறார்.