போதை பொருட்கள் விற்பனை: 17 ஆயிரம் கடைகளுக்கு சீல்
ஈரோடு, ஆக.11- ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகி யோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கட்டண படுக்கை யறை பிரிவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது, “ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் தொடங்கப் பட்டுள்ளது. 15 ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டது.
பவானி அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கட்டி டம் கட்டப்பட்டது. ஈரோடு அரசு மருத்து வமனையில் பல்வேறு வகையான கூடு தல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள் ளது” என்றார்.
ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் புற்று நோயை கண்டறியும் சோதனை கண்டறிய அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில் மொத்தம் 9.82 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியும் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
போதை பொருட்களை விற்பனை செய்வதாக 17 ஆயிரத்து 481 கடை களுக்கு சீல் வைக்கப்பட்ட தோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வணிக கடைகள் சீல் வைக்கப்படுவது வருத்தமளிப்பதாக இருந்தாலும், சிறிய லாபம் தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்த்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முழுவது மாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித் தார்.
ஓய்வு வயது 62
தகவல் வதந்தியே: தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஆக.11- அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. “அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது’ என்ற தகவல் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக மாற்ற எந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லை. அப்படியான எந்த ஆலோசனை யும் இல்லை” என குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரை தயாநிதிக்கு கொலைமிரட்டல்: போலீசார் கூடுதல் பாதுகாப்பு
வேலூர், ஆக.11- வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஏ- பிளாக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரு கிறார். தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தி னர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
அவர் சிகிச்சை பெற்று வரும் தளம் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், சி.எம்.சி.மருத்துவமனை மருத்துவ கண்காணிப் பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆக.10) வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவமனை கண் காணிப்பாளர் அலுவலகம் சார்பில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ் சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப் பட்டது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனை ஏ - பிளாக்கிற்கு பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பு: முதல் சுற்று கலந்தாய்வில் 19,922 மாணவர்கள்
சென்னை, ஆக 11- பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு சனிக்கிழமை(ஆக.11) நிறைவு பெற்ற நிலையில், மொத்தமுள்ள 1.79 இடங்களில் இதுவரை 19,922 மாண வர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கம்ப்யூட்டர் படிப்பில் 4,879 பேரும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பு 2,704 பேரும் சேர்ந்துள்ளனர்.
ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்
சென்னை, ஆக.11- கிண்டி ஆளுநர் மாளிகை இரண்டா வது நுழைவாயில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் வந்திருந்தார். ஆளுநரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் கேனை வாங்கி வைத்து விட்டு போலீசார் அந்த பெண்ணிடம் விசா ரித்த போது அவர் சற்று மனநலம் பாதிக்கப் பட்டவர் என்பதும், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரைச் சேர்ந்த மஞ்சுளா(41) என்பதும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரிய வந்தது.
அவர் கொண்டு வந்த மனுவை படித்துப் பார்த்தபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ் பியாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி, இன்ஸ்டாகிராம் மூலம் தன்னிடம் பேசி வந்ததாகவும், நேரில் சந்தித்து கொள்ளாமல் ஷேர் சேட் மூலம் மூன்று வருடங்களாக தன்னிடம் பழகிய தாகவும் திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நான் இறந்தால் அவர் தான் காரணம் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை சமாதானப்படுத்திய போலீ சார், மனுவை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்து விடுகிறோம் எனக் கூறி அந்த பெண்ணை கிண்டி மகளிர் காவல்நிலை யத்தில் ஒப்படைத்தனர். பின்னர் உறவினர் களிடம் அந்த பெண் ஒப்படைக்கப்பட்டார்.