tamilnadu

img

1500 ஆண்டுகள் பழமையான சமணர் நினைவு சின்னம் தகர்ப்பு

சிபிஎம் கண்டனம்

விழுப்புரம், ஆக. 7- விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  சமணர்களின் வாழ்விடங்கள் நினைவு சின்னங்க ளாக உள்ளன. செஞ்சியை சுற்றி 50 கி.மீ. சுற்று வட்டாரப் பகுதிகளில் சமண சமயம் செழித்து விளங்கியதற்கான வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், சமண முனிவர்கள் தங்கி தவம்  செய்த இடங்கள், சமணப் பள்ளிகள், சிறுகடம்பூ ரில் 24 தீர்த்தங்கர்ளின் உருவச் சிற்பங்கள், குகை கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் காணப்படு கின்றன. செஞ்சியை அடுத்த நெகனூர்பட்டி கிரா மத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே அரசு புறம்போக்கு நிலத்தில் சமண முனிவர்கள் வாழ்ந்த தற்கான சிறு குகை உள்ளது. இது அடுக்கம்பாறை  அல்லது மலைப்பள்ளிபாறை என்று அழைக்கப்படுகிறது. பாறையின் அடிப் பகுதியில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. மலைப்பள்ளி எனப்படும் இந்தப் பகுதியில் முனி வர்களுக்கு சேவை செய்து படுக்கைகளை அமைத்துள்ளனர்.

இங்குள்ள கல்வெட்டில் முத லில் பிராமி எழுத்துகளும், பின்னர் வட்டெழுத்து களும், அதைத் தொடர்ந்து தமிழ் எழுத்துகளின் தொடக்க கால எழுத்துகளும் இடம் பெற்றுள் ளன. இதுபோன்ற கல்வெட்டுகள் செஞ்சி பகுதியில் பறையம்பட்டு, தொண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ளன. இந்நிலையில் வியா ழக்கிழமை (ஆக. 6) செஞ்சி அருகே சமணர் நினைவு சின்ன குகைபாறை சமூக விரோதிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணி யன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சமூக விரோதி கள் சிலர் பாறைகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். பொக்கிஷமாக பாதுக்காக்க வேண்டிய நினைவு சின்னங்களை வெடி வைத்து  அழிக்கும் சமூக விரோத கும்பல்களை காவல்துறை யினர் கைது செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் மாவட்டத்தில் எங்கெல்லாம் சமணர்கள் படுக்கைகள் உள்ளதோ  அவற்றை மத்திய தொல்லியல் துறையும், தமிழக அரசும் இரும்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.