tamilnadu

img

சீனா பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

சீனாவில் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சீனாவின் கிழக்குப்பகுதியின் ஹுபி மாகாணத்தில் என்ஷி நகரில் உள்ள சாயாங்போ தொடக்கப்பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மீது 40 வயது நபர் தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்று செய்தி வெளியானது.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தாக்குதலுக்கான  காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.