tamilnadu

வங்கிக் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய கோரிக்கை

சிவகங்கை, மே21- பத்து பேருக்கு மேல் பணி செய்யும் சிறு,குறு நிறு வனங்களுக்கான வங்கிக் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி, மாவட்டக் குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியச் செயலாளர் உலக நாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், “பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை கள், பேருந்துகள்,உணவு நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைக் கடைகள் போன்ற சிறு நிறுவனங்களில் பத்துக்கும் மேற் பட்டோர் வேலைசெய்யும் நிறுவனங்களுக்கு வழங்கிய கட னுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் சம்பளம் வழங்க வேண்டுமென” மனுவில் கூறியுள்ளனர்.