சிவகங்கை, ஜூன்15- சிவகங்கை மாவட்டத்தி லுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் கள், ஊழியர்களுக்கு கொரோனா கால ஊதியம் வழங்க வேண்டு மென்ற உத்தரவை மத்திய, மாநில அரசு செயல்படுத்த வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் தென்னரசு, சுரேஷ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவில், “ கொரோனா ஊர டங்கு காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர் களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவை சிவகங்கை மாவட் டத்தில் செயல்படுத்த வேண்டு மென குறிப்பிட்டுள்ளனர்.