சென்னை, மே 23-விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.இஸ்ரோ தலைவர் கே.சிவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம்தேதிக் குள் செயல்படுத்தப் படவேண்டும்” என்றார்.75-வது ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.