10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (மே 16) அண்ணாநகர் பகுதி, பி.பி.தோட்டதில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் சீனு தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் விக்னேஷ், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் பிரியதர்ஷினி உள்ளிடோர் பேசினர்.