சிஐடியு கண்டனம்
சென்னை, மே 14- கடுமையான வறுமை, நெருக்கடியில் வாழும் ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறை யினர் கொடுக்கும் அடக்குமுறை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் நடவடிக்கையாக உள்ளது என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கண்டனம் தெரிவிக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது, ஊரடங்கு அறிவித்து ஐம்பது நாட்களை கடந்துள் ளது. ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையான வறு மையோடும், நெருக்கடியோடும் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்த ஆட்டோ தொழிலாளர்கள், ஆட்டோக்கள் ஓடாததால் துன்பத் திலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.
சம்மேளனத்தின் சார்பில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்திற்கும் ரூ.15,000 நிவாரணம் தரவேண்டும் என முதல்வருக்கு பலகட்ட மனுக்கள் அனுப்பப்பட்டன. பல ஆயிரம் ஆட்டோ தொழிலா ளர்கள் குடும்பத்தோடு போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கம் கண்டுகொள்ள மறுக்கிறது. முதல்வர் ஆட்டோ தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாக பொய்யான செய்தியை மக்களி டம் பரப்பி வருகிறார். 6 லட்சம் ஆட்டோ தொழிலாளர்க ளில் சுமார் 25,000 பேர் மட்டுமே நலவாரிய நிதி பெறும் தகுதியோடு இருக்கிறார்கள். நலவாரியத்தில் புதுப்பித்தலோடு இருப்பவ ருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நலவாரி யத்தில் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூபாய் 2000 கூட இதுவரை முழுமை யாக சென்றடையவில்லை. சிலருக்கு அரிசி, பருப்பு கொடுத்துள்ளார்கள். சிலருக்கு பணம் ரூபாய் 1000 ஏற்றியுள்ளார்கள். முழுமையாக பெரும்பா லான ஆட்டோ தொழிலாளர்களுக்கு கிடைக்காத சூழ்நிலைதான் நிலவுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு 50 நாட்களை கடந்து விட்ட சூழலில் சில அவசர அவசிய காரணங்களுக்காக ஆட்டோக்களை ஒருசிலர் இயக்கினால், அதனை மறைத்து காவல்துறை ரூபாய் 500முதல் 5000 ரூபாய் வரை அபராதம் போடுவதாக செய்திகள் வருகிறது. வாகனங்களை முடக்குவதாகவும் செய்திகள் வருகின்றன. காவல்துறையின் இந்த நடவடிக்கையானது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் நடவடிக்கை போல் அமைந்துள்ளது. ஏற்கனவே நொந்து போயி ருக்கும் ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறை ஏவும் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மேலும் காவல்நிலையங்களில் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் சிஐடியு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.