ஜாம்ஷெட்பூர்:
பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், முஸ்லிம் இளைஞர் ஒருவர்,இந்துத்துவா வெறிக்கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்துக் கடவுள்களைப் புகழ்ந்து,‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’ என்று கூறுமாறு மிரட்டி, விடிய விடிய அடித்துத் துன்புறுத்தியதில், முஸ்லிம் இளைஞர் இறந்து போயுள்ளார்.
ஜாம்ஷெட்பூர் அருகே சீரேய் கேலா-கர்சாவன் பகுதியைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் தப்ரிஸ் (22). இந்தமுஸ்லிம் இளைஞனை, வெறிக் கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ கூறுமாறு மிரட்டியுள்ளது. தப்ரிஸ் அவர்களின் மிரட்டலுக்கு இணங்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றதாக தப்ரிஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி, அருகிலிருந்த மின்கம்பத்தில் கட்டிப் போட்டு, விடிய விடிய சுமார் 7 மணிநேரம் அடித்துத் துன்புறுத்தி கொடூரசித்ரவதை செய்துள்ளது.இதை பலரும் வீடியோ எடுத்து,சமூக ஊடகங்களில் வெளியிடவே, தகவலறிந்த போலீசார், தப்ரிஸை அந்த கும்பலிடம் இருந்து புதன் கிழமை காலையில் மீட்டுள்ளனர். அப்போது, இளைஞன் தப்ரிஸ் சுயநினைவில்லாமல் இருந்துள்ளார்.
அவரை ஜாம்ஷெட்பூரில் உள்ள சதார் மருத்துவமனையிலும், பின்னர்டாடா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, தப்ரிஸ் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஜாம்ஷெட்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ரிஸின் சாவுக்கு காரணமான, இந்துத்துவா வெறிக்கும்பல் மீது போலீசார் ‘ஐ.பி.சி. 302’ மற்றும் ‘295ஏ’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.