tamilnadu

img

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடத்தை மாற்றுக!

புதுதில்லி, ஜூன் 29- சென்னை மெட்ரோ ரயில்  இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாநிலங்க ளவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.  ரங்கராஜன் வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்க ளவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு கோரிக்கை மீதான விவா தத்தில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு ரூ.80  ஆயிரம் கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை இறுதி  செய்துள்ளது. இத்திட்டத் திற்கு பொதுமக்கள் தரப்பில் பொதுவாக வரவேற்பு இருந்த போதிலும், திட்ட  வழித்தடத்தில் சில குறை பாடுகள் உள்ளன. அதாவது, மெட்ரோ ரயில் கொள்கை, 2017-இன்  வழிகாட்டுதலின்படி இது  அமையவில்லை. மேலும்,  தற்போது அமைக்கப்பட வுள்ள திட்டத்தில் சென்னைக்  கான 2-ஆவது மெட்ரோ ரயில் வழித்தடமானது, டிடிகே சாலை, லஸ் சர்ச்  சாலை, கச்சேரி சாலை ஆகி யவை வழியாகச் செல்கிறது. இது வசதிபடைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இப்  பகுதியில் வசிக்கும் குடி யிருப்புவாசிகள் சொந்த போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளனர். மேலும்,  மூன்று கிலோ மீட்டர் வழித்  தடத்தில் அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் அல்லது  பள்ளி, கல்லூரிகள் ஏதும்  இல்லை. இதனால், திட்டத் தின் நோக்கம் உரிய பயனை அளிக்காது. இப்பகுதி சாலைகள் குறுகலானதாக இருப்பதால், இதர அரசு, தனியார் வாகனங்களின் போக்குவரத்துக்கு மெட்ரோ  ரயில் இடையூறை ஏற்ப டுத்தும். மேலும், மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதனைச் சார்ந்து மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையம், மின்சார ரயில் நிலையம் ஆகியவைகள் அருகமையில் இருக்க வேண்டும். ஆனால் தற் போது டி.டி.கே. சாலை வழியாக செல்லும் இந்த  வழித்தடம் உயர் வசதி படைத்தவர்கள் வசிக்கும் இடமாக இருப்பதாலும், மெட்ரோ ரயிலில் ஏறி, இறங்கி மாறி போவதற்கு மாற்று போக்குவரத்து வசதிகள் அருகில் இல்லா மல் இருப்பதாலும் இந்த  வழித்தடம் பொதுமக்க ளுக்கு பயன்தாரது. எனவே, இந்த விவகா ரத்தில் மத்திய அரசு தலை யிட்டு, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்ட அமைப்பின் வழித்தடத்தை டி.டி.கே. சாலைக்குப் பதி லாக மாற்றம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.