குடிநீர் குழாய் மற்றும் சாலை பயன்பாடு குறித்து குறைதீர் கூட்டத்தில் பெண்கள் மனு
ஈரோடு, ஜூன் 2- வீரப்பன்சத்திரம், பெரிய குட்டை வீதியில் வசிக்கும் பெண் கள், தங்கள் பகுதியில் உள்ள பொது குழாய் குடிநீர், மின் கம்பம் மற்றும் சாலை ஆகியவற்றை சிலர் சொந்தம் கொண் டாடி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்த னர். ஈரோடு மாவட்டம், பெரிய குட்டை வீதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி யைச் சேர்ந்த கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் ஒரு குடும் பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலர், குடிநீர் பைப், மின் கம்பம் மற்றும் சாலை ஆகியவை தங்கள் சொந்த முயற்சி யால் அமைக்கப்பட்டவை என்றும், மற்றவர்கள் அவற் றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், கார், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அவ் வழியாக வரும்போது, அந்தச் சாலை தங்களுடையது எனக் கூறி, வாகனங்கள் செல்ல தடை விதித்து தகராறு செய்வ தாகவும், பொது குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்கும் பல் வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், அவர்கள் அனு மதிக்கும் நேரத்தில் மட்டுமே தண்ணீர் பிடிக்க வேண் டும் என்று வற்புறுத்துவதாகவும், மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர் வாகிகளில் ஒருவரும், கோவை, பாப்ப நாயக்கன் பாளையம் மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்த அ.க. வாசு மே 31 ஆம் தேதியன்று பணி நிறைவு செய்ததை முன்னிட்டு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மருந்தாளுனர்கள் சங்க முன் னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்து துறை ஓய்வுதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் மற்றும் மருத்து வர் வடமலைநாதன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்
உதகை, ஜூன் 2 – உதகை அரசு கலைக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்களன்று தொடங்கியது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இங்கு 18 இளநிலை மற்றும் 12 முதுநிலை படிப்புகள் வழங்கப்படு கின்றன. நடப்பு ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன், உயர்கல்வியில் சேர விரும்பும் மாண வர்களுக்காக மே 7 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடை பெற்றது. மொத்தம் 1142 இளநிலை மாணவர் சேர்க்கை இடங்களுக்கு, ஆன்லைன் மூலம் 23,184 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. குறிப்பாக, 40 இடங்கள் மட் டுமே உள்ள இளங்கலை பாதுகாப் பியல் பாடத்தில் சேர அதிகபட்சமாக 1415 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி. காம் சிஏ பாடத்தில் சேர 1338 பேரும், பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்தில் சேர 1329 பேரும் விண்ணப்பித்துள்ள னர். மேலும், பி.ஏ. தமிழ் பாடத்தில் சேர 1312 பேரும், பி.ஏ. சுற்றுலாவியல் பாடத் தில் சேர 1022 பேரும் விண்ணப்பித்துள் ளனர். இந்தியாவிலேயே உதகை அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே உள்ள பி.எஸ்சி வனவிலங்கு உயிரியல் பாடத் தில் சேர 930 பேர் விண்ணப்பித்துள்ள னர். இதனையடுத்து, திங்கட்கிழமை முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வு தொடங்கியது. விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசு கள், மாற்றுத்திறனாளிகள், அந்தமான் நிக்கோபார் மற்றும் என்.சி.சி மாண வர்கள் என சிறப்பு பிரிவில் 726 விண்ணப் பங்கள் பெறப்பட்டன. தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு வேதியியல் துறை பேராசிரியர் ஸ்ரீதரன் ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். இளம் வணிகவியல், வணிகவியல் (சிஏ.), வணிகவியல் (ஐ.பி.) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட கலந் தாய்வு ஜூன் 4 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி யும் நடைபெறுகிறது. அறிவியல் துறை சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 5 ஆம் தேதி நடக்கி றது. இளங்கலை பாடப்பிரிவுகளுக் கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. மீதமுள்ள இடங் களுக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இதன் பின்னர் மாணவர்களுக்கு வகுப்புகள் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என கல் லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
காப்பீட்டு முகாம்
கோவை, ஜூன் 2 – மேட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முகாம் நடத்த வேண்டும் என சிஐ டியு பொதுத் தொழிலாளர் சங் கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம் மேட் டுப்பாளையம் தாலுகா சிஐ டியு பொது தொழிலாளர் சங் கத்தின் செயலாளர் பாஷா தலைமையில் திங்களன்று ஆட்சியரிடம் அளித்த மனு வில், மேட்டுப்பாளையம் மற் றும் சுற்று வட்டார பகுதி யில் ஏழைஎளிய உழைப் பாளி மக்கள் வசித்து வரு கின்றனர். இந்த பொதுமக்க ளுக்கு முதலமைச்சர் மருத் துவ காப்பீட்டு திட்டத்தின் முகாம் நடத்தக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற் றுக்கொண்ட ஆட்சியர் இத் திட்ட அதிகாரியை அழைத்து, மேட்டுப்பாளையம் பகுதி யில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் அமைத்து தரக் கூறினார்.