tamilnadu

img

வெள்ளைத் தங்கம்; கட்டமைத்த நகரம்!

வெள்ளைத் தங்கம்; கட்டமைத்த நகரம்!

தொழிலால் சாதித்த உடுமலை

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இரு மலை களின் ஊடே அமைந்த உடுமலை, பஞ்சாலை தொழிலால் கட்ட மைக்கப்பட்ட நகரமாகும். உடுமலையின் வரலாறு: வரலாற்று ஆய்வாளர்கள் உடுமலைக்கு பல வரலாறுகளை கூறுகின்றனர். முதலில் ஊடுமலையாக பெயர் பெற்று பின்னர் உடுமலையாக மருவியது என்கின்றனர். வண்டல், கரிசல் என பல வகை மண் வகைகளை கொண்ட இப்பகுதியில், மலைத்தொடர்களில் இருந்து உருவாகிய சிற்றாறுகள், ஏழு குளங்களையும் நிரப்பும் வகையில் அமைத்துள்ளது உடுமலை நீர் மேலாண்மைக்கு உதாரண மாக இருக்கிறது. அமராவதி ஆற்றங்கரை நாகரீகம் செழித்திருந்ததற்கு சாட்சியாக ஆற்றின் கரையில், பழங்கால கோவில்களும், வரலாற்று ஆவணங்களும் நிறைந்து காணப்படுகிறது. மூவேந்தர்கள் ஆட்சிக்கு  பிறகு பாளையக்காரர்களால், நிர்வகிக்கப் பட்ட இப்பகுதி, நாட்டின் சுதந்திர போராட் டத்துக்கு வலுவான அடித்தளமிட்டுள்ளது. தளி பாளையக்காரர்களால், ஆங்கிலே யர்களுக்கு எதிரான போராட்டம் குறித்த பல்வேறு வரலாற்று தரவுகள் இப்பகுதி முழு வதும் காணப்படுகிறது. பஞ்சாலை தொழிலின் வளர்ச்சி: பிரிட்டிஷ் ஆட்சியின் போதே, உடுமலை வட்டாரம் தொழிற்புரட்சிக்கு அடித்தளமிட்டது. இதற்கு, இம்மண்ணில் செழித்து விளைந்த ‘பருத்தி’ முக்கிய காரணமாக இருந்தது. தென்னிந்தி யாவின் மான்செஸ்டர் என கோவை பெயர் பெற உடு மலையின் பங்களிப்பும் முக்கியத்துவமானது. பல ஆயிரம் ஏக்கரில் விளைந்த பருத் தியை அரவை செய்யும் ‘ஜின் னிங் மில்கள் 1940 ஆம் ஆண்டு காலகட் டத்திலேயே உடுமலை யிலும், பெதப்பம்பட்டி போன்ற புறநகரங்களி லும், துவங்கப்பட்டன. பஞ்சாலை தொழில்நுட்பங்கள் வேக வளர்ச்சி அடைந்த நிலையில் உடு மலை பகுதியும் அதற்கு ஈடுகொ டுத்து, பஞ்சாலைகள் துவங்கப் பட்டன. இப்பகுதி கால நிலையால் நீண்ட இழை பருத்தி ரகங்கள் இம் மண்ணின் செழித்து வளர உறு துணையாக பி.ஏ.பி., பாசன திட் டம் அமைத்து. இதனால் பருத்தி சாகுபடி பரப்பு பல மடங்கு உயர்ந் தது. இதையடுத்து, உடுமலையை சுற்றிலும், நுாற்றுக்கணக்கான பஞ்சாலை கள் துவங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.  இத்தொழிற்சாலைகளை மையமாக  வைத்து, புதியகுடியிருப்புகளும், பொருளா தார மையங்களும் உருவாகின. ஒன்றிய, மாநில அரசு வேலையில் இருக்கும் ஊழியர்களை விட, பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மரியாதை அளிக்கப் பட்ட காலமாக இருந்தது. இவ்வாறு உடும லையின் பொருளாதாரத்தை, பஞ்சாலை களும் அதில், வியர்வை சிந்திய தொழிலா ளர்களின் உழைப்பும் பல மடங்கு உயர்த் தின. தொழிலில் வீழ்ச்சி: உச்சத்தில் இருந்த பஞ்சாலை தொழில்,  இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை  அறிமுகப்படுத்தப்பட்ட 1990க்கு பிறகு நிலைமை தலைகீழாய் மாறியது. நிலை யில்லாத பருத்தி விலை, பொருளாதார சூழல்கள் பஞ்சாலைகளை மூடும் நிலைக்கு  தள்ளியது. இதனால், பல ஆயிரம் தொழிலா ளர்கள் வேலை இழந்தனர். மேலும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை தற்போது வரை கிடைக்கா மல், தவிக்கும் தொழிலாளர்கள் இன்ற ளவும் உள்ளனர். ஒன்றிய அரசின் தவ றான பொருளாதார கொள்கைகளால், சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப் பட்டு வருகின்றன. எனவே, வெள்ளை  தங்கமும், பஞ்சாலைகளும், தொழி லாளர் உழைப்பும் கட்டமைத்த உடு மலையையும், பொருளாதாத்்தையும் மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.