tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் மக்கள் போராட்டம்

குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் மக்கள் போராட்டம்

கோவை, மே 15- அப்பநாயக்கன்பட்டியில் குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதியளித்தும் வழங்காததால், ஆவேசமடைந்த மக் கள் காலிக்குடங்களுடன் போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை ஒன்றியம், சூலூர் வட்டத் திற்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு  அத்திக்கடவு திட்டம் மூலம் குடிநீ ரும், போர்வெல்கள் மூலம் நீரும் வாரம் ஒருமுறை விநியோகிக் கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக மாதம் ஒருமுறை மட் டுமே குடிநீர் மற்றும் நீர் வழங் கப்பட்டு வருவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக, கடந்த மே 1 ஆம் தேதி யன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் புகார் தெரிவித்த னர். அப்போது, சீரான குடிநீர் விநி யோகம் உறுதி செய்யப்படும் என  அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப் பினும், பிரச்சினை தீர்க்கப்படாத தால், சுல்தான்பேட்டை ஒன்றிய அலு வலகத்தில் மக்கள் மீண்டும் புகார ளித்தனர். இந்நிலையில், மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங் கப்பட்டதால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வியாழயன்று காலிக் குடங்க ளுடன் ஊராட்சி அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, சீரான குடிநீர் மற்றும் நீர் விநியோகத்துக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும், கூடுதலாக ஒரு மேல்நிலை நீர்தேக் கத் தொட்டி மற்றும் போர்வெல் அமைத்து தண்ணீர் பற்றாக்குறை யைப் போக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, மக்கள் போராட் டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர்.