tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, மே 21- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடகா காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடகா அணை களிலிருந்து திறக்கப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவுமாக உள்ளது. இந்நிலையில், காவிரி கரை யோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் செவ்வாயன்று விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, புதனன்று காலை 6 மணி நிலவரப் படி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம்

நாமக்கல், மே 21- குமாரபாளையத்தில் தீயணைப்புத்துறை சார்பில், புதனன்று செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு தீயணைப்புத் துறையின் சார்பில் செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் எதிர்பாராமல் வீடு மற்றும் அலுவலகம் பொது இடங்களில் தீ விபத்துகள் ஏற்படு வதை தடுக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? நீர் நிலைகளில் சிக்கிய நபரை எவ்வாறு காப்பாற்ற வேண் டும்? ஆகியவை குறித்து குமாரபாளையம் தீய ணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்த னர். இந்நிகழ்வில், தீயணைப்புத்துறை அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சேர்க்க அழைப்பு

சேலம், மே 21- 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையங்களில், பெற்றோர்கள் தங்களது 2 வயது முதல்  5 வயதுடைய குழந்தைகளை சேர்த்து பயன்பெற லாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு, சேலம் மாவட் டத்தில் செயல்படும் 2,697 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகி றது. குறிப்பாக, 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல், கதை, விளையாட் டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக் கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்க ளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர்கள், தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையத் தில் தவறாது சேர்க்க வேண்டும், என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம்

நாமக்கல், மே 21- குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவல கத்தில் ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சேசசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு சார்பில், திங்க ளன்று வாகன ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம் முகாமினை குமாரபாளையம் வாகனத் தணிக்கை ஆய் வாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். இதில் வாகன ஓட்டுநர்களுக்கு ரத்த அழுத்தம், நுரையீரல் செயல் பாடு, எலும்பு வலிமை, கண் பார்வை குறைபாடு, கண்  பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்க ளுக்கான பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கனரக வாகன ஓட்டுநர்கள் கூட்டமைப் பின் மாநிலத் தலைவர் பத்மநாபன், ஓட்டுநர்களுக்கான சங்கத்தின் மாநிலச் செயலாளர் அசோக்குமார் மண்ட லத் தலைவர் ஆர்.முரளி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தை தொடங்கி வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் வெள்ளி விழா புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், ஆட்சியர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் ஆகியோர் பங்கேற்றனர்.'

கோழியை கவ்வி சென்ற சிறுத்தை தருமபுரி, மே 21- பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை, கோழியை கவ்வி செல்லும் வீடியோ காட்சிகள் இணை யத்தில் பரவியுள்ளதால், கிராம பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும், கால்நடைகளை வேட்டையாடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித் துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, விநாயகம் (50) என்பவ ரின் வீட்டின் முன்பிருந்த கோழியை கவ்வி கொண்டு, வனத்திற்கு செல்லும் வீடியோ காட்சி தற்போது இணையத் தில் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இவரின் வீட்டிற்கு காவல் இருந்த நாயை சிறுத்தை கவ்வி சென்றது குறிப்பிடத் தக்கது.