மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை மாவட்டச் செயலாளரான தோழர் கே.சி.கருணாகரன் அண்மையில் காலமானார். அவருடைய இல்லத்திற்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோர் சென்று அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், அஜய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.