tamilnadu

img

ஈஷா யோக மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்  கொள்ளு ரமணா (32). இவர்  கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு ஈசாவிலுள்ள அவரது அறையில் கடிதம் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அலந்துறை காவல்துறையினர் விரைந்து சென்று ரமணாவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் ரமணாவின் அறையில் கடிதம் ஒன்று இருந்ததாகவும் அதில் மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்று எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.