அன்னூர், மே 4- அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர். அன்னூர் ஒன்றியம் ஒட்டர் பாளையம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதார மையம் பொதுமக்களுக்கு முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டர் பாளையம் ஊராட்சி பகுதியில் இலவசமாக பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கபீர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகி விஜய், அருண், கோகுல், குமார், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.