tamilnadu

img

ஆபத்தான முறையில் பரிசலை இயக்கும் மாணவர்கள்

ஆபத்தான முறையில் பரிசலை இயக்கும் மாணவர்கள்

பவானி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை

- கோ.மகேஷ்வரன் - கோபி, ஜூன் 29- பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண் டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக  கோரிக்கை விடுத்து வரும் நிலை யில், நாள்தோறும் பள்ளி மாண வர்கள் ஆபத்தான முறையில் பரி சலை இயக்கி ஆற்றை கடந்து வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்கள் அத் தாணி, அந்தியூர், பவானி, ஈரோடு  உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்லவும், அவசர கால சிகிச்சைக்கு செல்லவும், பரி சல் மூலம் பவானி ஆற்றை ஆபத் தான முறையில் கடந்து வருகின்ற னர். மேலும், ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை  கல்வி பயின்ற மாணவர்கள், உயர் கல்வி பெற வேண்டுமெனில், அத் தாணி பகுதியிலுள்ள அரசுப் பள்ளிக்கு செல்ல வேண்டும். இத னால் பள்ளி மாணவர்கள் நாள் தோறும் ஆபத்தான முறையில் பரி சல் மூலமாக பவானி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் பவானி ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டால், பரிசல் இயக்க முடியாத  நிலை ஏற்படுகிறது. அம்மாபாளை யத்திலிருந்து ஆற்றை கடந்தால் 100 மீட்டரில் உள்ள பேருந்து நிறுத் ததிற்கும் பள்ளி செல்லவும் அப் பகுதி மக்களும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் 7 கிலோ மீட் டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை  ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பேருந்து வசதி இல் லாததால் பள்ளிக்கு செல்வது தடைபடுகிறது. மேலும், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரி ழப்புகள் ஏற்படுகிறது. எனவே, அம்மாபாளையம் பவானி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழக அர சிற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எந்த  ஒரு அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகி யோரிடம் கிராம மக்கள் மனு அளித்தும், சட்டமன்றத்தில் அந்தி யூர் எம்எல்ஏ நான்கு முறை குரல்  எழுப்பியும், பாலம் கட்டுவதற் கான பணிகள் ஆய்வு செய்யப் பட்ட நிலையில், பணிகள் தொடங் கப்படவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை முகமைக்கு, மண்  பரிசோதனை செய்ய வேண்டி அனுமதி வழங்கியும், எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அம்மாபாளையம் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான உயர்மட்ட பாலம்  கனவாக மட்டுமே உள்ளது. எனவே, அரசுப்பள்ளி மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.