tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அறிவுசார் குறையுடையோருக்கான விளையாட்டுப் போட்டி

சேலம், மே 16- சேலம் மாவட்டத்தில் அறிவுசார் குறையுடையோருக்கான விளையாட் டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம், உடையாப்பட்டி கைலாஷ் மானசரோவர் மேல்நிலைப் பள்ளியில், அறிவுசார் குறையுடையோ ருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட  ஆட்சியர் ரா.பிருந்தாதேவி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத் தார். அப்போது அவர் பேசுகையில், சிறப்பு ஒலிம்பிக் பாரத் (Special Olympics Bharat under Sports Authority of India) உலக அளவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவ னத்தால் அறிவுசார் குறையுடையோ ருக்கு 21 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவிலான விளையாட்டு வீரர்க ளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. சேலம்  மாவட்டத்தில் அறிவுசார் குறைவுடை யோருகான சைக்கிள் பந்தயம், போஸ்  (BOCCE – இத்தாலியன் பந்து விளை யாட்டு) ஆகிய இரண்டு விளையாட் டுப் போட்டிகளுக்கான தேர்வு மே 16, 17  ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும், தேசிய அளவில் தேர்ச்சி பெறும் விளையாட்டு வீரர்கள் 2027 ஆம் ஆண்டு சிலி நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மலை உச்சியில் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

தருமபுரி, மே 16- பாலக்கோடு அருகே மலைக்கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜோதிஹள்ளி கிராமம், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. வனத்திலிருந்து வரும் விலங்கினங்கள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தூக்கி செல்வதும் அவ்வப்போது நடந்து வந்தது. இந்நிலையில், வெள்ளியன்று சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, அப்பகுதியிலுள்ள மலையின் உச்சியில் சிறுத்தை அமர்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதுவரை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம். இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம், என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிஸ்கெட் பாக்கெட்டில் வைத்து கஞ்சா கடத்தல்

சேலம், மே 16- சேலம் மத்திய சிறைக் குள், பிஸ்கெட் பாக்கெட்டின்  நடுவே வைத்து கஞ்சா கடத்த லில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சாகுல். இவரது நண்பரான பர மத்திவேலூரைச் சேர்ந்த கவி யரசன் என்பவர் திருட்டு  வழக்கில் கைது செய்யப் பட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட் டுள்ளார். இவரை பார்ப்பதற்காக முகமது சாகுல், சேலம் மத் திய சிறைச்சாலைக்கு வந்துள்ளார். அப்பொழுது பிஸ்கெட் பாக்கெட்டின் நடுவே கஞ்சா வைத்து கடத்தி வந்ததை சோத னையில் கண்டுபிடித்த சிறை காவலர்கள், அஸ்தம் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் முகமது சாகுலை கைது செய்து, அவரிடமிருந்த 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அழைத்துச் சென்றனர்.

காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி

தருமபுரி, மே 16- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீரின்றி காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை, பயன் பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் ஒன்றியம், ஜக்க சமூத்திரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி தண்ணீரின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் சுகாதார நிலை யத்திற்கு தினந்தோறும் வரும் நூற்றுக்கணக்கான பொது மக்கள், குடிநீரின்றி கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற் கொண்டு, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும், என பொதுமக்கள் மற்றும் நோயளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.