குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் கழிவுநீர் கால்வாய் திட்டம்
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஏப்.25- திருச்செங்கோடு பகுதியில் குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை செயல் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு நகராட்சிக்குட்பட்ட தொண்டிக் கரடு முதல் சூரியம்பாளையம் வரை யில், கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகள், கிணறுகள் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் பாதிக் கப்படக்கூடாது. மாற்றுப்பாதையை தேர்வு செய்து நகராட்சி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் குறித்து முறையாக பொதுமக்களிடம் தெரிவித்து, அவர் களின் கருத்துகளை கேட்டறிய வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் 18 ஆவது வார்டு கட்சி கிளைச் செயலா ளர் சிங்காரவேல் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சீனிவாசன் வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, மூத்த தோழர் ஏ.ஆதிநாரா யணன், கிளைச் செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.