ஓராண்டில் ரூ.22.13 கோடி அபராதம் வசூல்
சேலம், ஏப்.4- சேலம் ரயில்வே கோட்டத்தில் 2024 – 2025 ஆம் நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லா மல் பயணித்ததாக ரூ.22.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்க ளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர் கள், முறையற்ற பயணம் மேற்கொள்பவர் கள் உள்ளிட்டவர்களைக் கண்டறிந்து அபரா தம் விதிக்க ரயில்வே பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொண்ட குழுவினர், ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும், நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். அதன்படி, கடந்தாண்டு ஏப்.1 ஆம் தேதி முதல் இந்தாண்டின் மார்ச் 31 ஆம் தேதி வரை 2024 - 2025 ஆம் நிதியாண்டில் சேலம் கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இல் லாமல் பயணித்த 1,64,149 நபர்களிடமிருந்து ரூ.13 கோடியே 52 லட்சத்து 74 ஆயிரத்து 152 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முறை யற்ற பயணம் மேற்கொண்டதாக 1,65,115 நபர்களிடமிருந்து ரூ.8 கோடியே 56 லட்சத்து 23 ஆயிரத்து 533 அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது. ரயில்களில் கட்டணம் செலுத் தாமல் கூடுதலாக பொருள்களைக் கொண் டுச் சென்றதாக 833 நபர்களிடமிருந்து ரூ.4 லட் சத்து 74 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக் கப்பட்டுள்ளது. மொத்தமாக 2024 - 2025 நிதி யாண்டில் சேலம் கோட்டத்தில் ரூ.22 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரத்து 090 அப ராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது சேலம் ரயில்வே கோட்டத்தில் ஓராண்டில் வசூ லிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத்தொகை யாகும்.